கனவுலகம்-6

தன் சிந்தனைக்கும் உண்மைக்கும் இடையே இருந்த இடைவெளியை உணரத்துவங்கினான் அவன். புதிதாக சேர்ந்திருந்த வேதியல் தொழிற்சாலையில் வாழ்வியல் பாடம் படிக்கத்துவங்கினான், சுகாதாரமற்ற வேலையிடமும், சுயநலம்பிடித்த புறம்பேசும் மனிதர்கள் நிறைந்த அந்தச்சூழலும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேலையில் ஆர்வமும் அவனுக்கு இல்லை அதனால் நல்ல பேரும் அவனுக்கு கிடைக்கவில்லை.

ஆயினும் தோல்வியடைந்தவனாக தந்தையின் முன் நிற்க அவனுக்கு விருப்பமில்லாததால் எப்படியோ தாக்குப்பிடித்தான். நாளுக்குநாள் அவனுடைய பொறுமை நலிந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட பொறுமையை முற்றாக இழந்துவிட்ட ஒரு நாள் அவனுக்கு பெயிண்ட் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. சிறப்பாக அவன் கேள்விகளுக்கு பதில் சொன்னதால் வேலையும் கிடைத்தது. அங்கே மனிதர்களைப்பொருத்தவரை ஆரோக்கியமான சூழல் நிலவியது.

மாதவனிடம் அவன் பேசிக்கொண்டிருந்தபோது அதைக்கேட்டுக்கொண்டிருந்தவர் வேறுயாருமல்ல கணித விரிவுரையாளராக பணியாற்றிய அவனுடைய தந்தைதான்.

அவர் கேட்டதோடு நில்லாமல் தன் சகாக்களிடம் வெறும் கணினியை மட்டும் வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள முடியுமா என்று ஆலோசனையும் கேட்டார், அவர்களும் நம்பிக்கை தெரிவிக்க. மகனுக்காக ஒரு கணினிக்கு முன்பணம் செலுத்திவிட்டு அவனிடம் சொன்னார். அவனுக்கு மகிழ்சியாலும் நன்றியாலும் கண்கள் பனித்தன.

80286 வகை கணியான அதை வாங்க அவர்களுக்கு ஆன செலவு ரூபாய் 38,500 அவன் நினைத்ததுபோல 12,000 அல்ல. கணினி கைக்குக்கிடைத்த சில நாட்களில் பயிலகத்துக்கு சென்றான் தன்னுடைய தாய கட்ட விளையாட்டை தொடர்வது அவனுடைய எண்ணம், ஆனால் அவனுடைய வட்டிலிருந்த தகவல்களை அவர்கள் ஏற்கனவே அழித்து விட்டார்கள், அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்ன தெரியுமா? மற்றவர்களுடைய வட்டில் நிறைய வெற்றிடம் இருந்ததால் அப்படியே பயன்படுத்த முடிந்தது ஆனால் உன்னுடையது நிறைந்திருந்தது.

அதன்பின் அவனுக்கு தாய கட்டவிளையாட்டை வடிவமைப்பதில் ஆர்வம் போய்விட்டது ஆனால் கணினி ஆர்வம் தீயாய் பற்றிக்கொண்டது.

நான்கு வண்ணங்கள் மட்டுமே ஒரு நேரம் திரையில் காட்ட முடிந்த அந்த திரையில் அவன் கணினி வரைகலையின் அடிப்படையை பயின்றான்.

திரையில் அவன் காட்டிய அசைவுப்படங்களைப்பார்ந்த ஒருவன் தன்னுடைய கேபிள் டிவிக்காக அவற்றை ஒளிநாடாவில் பதிவுசெய்துதரமுடிமா என்று கேட்ட கேள்வி அவனை கணினி வரைகலையைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளத்தூண்டியது.

அப்பாவின் சகா ஒருவர் அவனை ஒரு கிராபிக்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்துச்சென்றார். அவர்களிடம் அவன் கேட்டது இதுதான், நான் ஏற்கனவே பணியில் இருப்பதால் என்னால் முழுநேரம் இங்கே வரமுடியாது, தினமும் மாலை வருகிறேன், எனக்கு சம்பளம் தரவேண்டாம், ஒரு தேனீர் வழங்கும் பையனாக என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள், இங்கே உள்ள கணினிகளை துடைப்பதற்கல்லாமல் வேறெதற்கும் உங்கள் அனுமதியின்றி தொடமாட்டேன். நீங்கள் வேலைசெய்யும்போது திரையைப்பார்க்க அனுமதித்தால் போதும்.

வேற்றுலக ஜந்துவுக்கான பார்வையை வழங்கியவர்கள் அதற்கெல்லாம் இங்கே ஏற்கனவே ஆள் இருக்கிறது என்று மறுத்துவிட்டார்கள். அவன் கேட்டவிதமே அவர்களை பயமுறுத்தியிருக்கவேண்டும்.

சிலிகன் கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ஒரு அறிமுகவிழாவை ஒரு நட்சத்திர விடுதியில் நடத்தியபோது அவனுக்கும் ஒரு அனுமதி சீட்டை சம்பாதித்துக்கொண்ட அவனுக்கு அவர்களுடைய எடுத்துக்காட்டுக்களைப் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு