ஒரு AI தொடர் எழுத
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS9eM9l6RQDuhgckrqmAeyB4m4NRzpX0-kqD2ujA1MyYmAQuhQl6daxWfQ50KWjZPczG7xP2U1R0Y3St0rSluqgSTy-xfvpvyDUzE5gW8QIgm_0MPOPc3Yi1dSUEFJT7Jkq8l4mofwIGVQR_uysuMiXkZr74-rgz6urzYsUfN9qTrUK45FmT0VOg/s320/%E0%AE%8F%E0%AE%90%20(1).png)
முதலில் ஏ.ஐ. பற்றிய சிறு குறிப்புகளாகத்தான் எழுத உத்தேசம். அப்படி எழுதவும் தொடங்கிவிட்டேன். பிறகுதான் எடுத்துக் கொண்ட பொறுப்பு மெல்ல உறைத்தது! தெளிவான திட்டமிடலும் பெரும் உழைப்பும் கோரும் வேலை அது! தீவிர எழுத்தை விட்டு நான் விலகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றது. நண்பர்கள் பலருக்கு நான் முன்னொரு காலத்தில் அறிவியல் புனைகதைகள் எழுதியவன் என்பதே புதிய தகவலாக இருக்கக் கூடும்! பேசுவதிலேயே கூட ஆர்வம் பெரிதும் மங்கிவிட்டது! பெரும்பாலும் ஓரிரு வரிகளிலேயே முடித்துக்கொள்ளுவேன். அதற்காக கூட்டத்தை விட்டு விலகுவது இல்லை, கேட்பதே பெரும் நிறைவு! உறவினர்கள்களால் என் அமைதியை ஏற்க முடியவில்லை! ஓயாமல் நான் பேசுவதை கேட்டு வளர்ந்தவர்கள் பலர்! தம்பியொருவன் என் வாழ்க்கையை இரு கூறாக பிறித்துச் சொன்னான், "first half செம, second half ரொம்பத் தொய்வு". சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும்! எனக்கு மிகவும் ஆர்வமூட்டிய துறை இது! என்னை மிகவும் மிரட்டிய, வெருண்டு ஓடச்செய்த துறையும் இதுதான். அல்ஜீப்ரா (Algebra), டிரிக்னாமெட்ரி (Trigonometry) இதெல்லாம் கணித பாடத்தில் ஏன் வைத்துத் தொலைக்கிறார்கள். இதையெல்லாம்