இடுகைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்

ஒரு AI தொடர் எழுத

படம்
முதலில் ஏ.ஐ. பற்றிய சிறு குறிப்புகளாகத்தான் எழுத உத்தேசம். அப்படி எழுதவும் தொடங்கிவிட்டேன். பிறகுதான் எடுத்துக் கொண்ட பொறுப்பு மெல்ல உறைத்தது! தெளிவான திட்டமிடலும் பெரும் உழைப்பும் கோரும் வேலை அது! தீவிர எழுத்தை விட்டு நான் விலகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றது. நண்பர்கள் பலருக்கு நான் முன்னொரு காலத்தில் அறிவியல் புனைகதைகள் எழுதியவன் என்பதே புதிய தகவலாக இருக்கக் கூடும்! பேசுவதிலேயே கூட ஆர்வம் பெரிதும் மங்கிவிட்டது! பெரும்பாலும் ஓரிரு வரிகளிலேயே முடித்துக்கொள்ளுவேன். அதற்காக கூட்டத்தை விட்டு விலகுவது இல்லை, கேட்பதே பெரும் நிறைவு! உறவினர்கள்களால் என் அமைதியை ஏற்க முடியவில்லை! ஓயாமல் நான் பேசுவதை கேட்டு வளர்ந்தவர்கள் பலர்! தம்பியொருவன் என் வாழ்க்கையை இரு கூறாக பிறித்துச் சொன்னான், "first half செம, second half ரொம்பத் தொய்வு". சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும்! எனக்கு மிகவும் ஆர்வமூட்டிய துறை இது! என்னை மிகவும் மிரட்டிய, வெருண்டு ஓடச்செய்த துறையும் இதுதான். அல்ஜீப்ரா (Algebra), டிரிக்னாமெட்ரி (Trigonometry) இதெல்லாம் கணித பாடத்தில் ஏன் வைத்துத் தொலைக்கிறார்கள். இதையெல்லாம்

பெண்ணியம்!

படம்
  “ நீங்க செய்தது பெண்கள் , தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட செய்றமாதிரி இருக்கு ”, என்றார் தோழி . நேற்று என் கோபம் பற்றிய பதிவுக்குத்தான் இப்படி ஒரு எதிர்வினை ! நான் யோசித்திராத கோணம் , உண்மை தான் ! என் மனைவிடம் கூட கண்டிருக்கிறேன் . முதன்முதலில் அவளின் தகிக்கும் கோபத்தை நான் உணர்ந்தது அவள் பிறந்தநாளை மறந்த போது ! மேகமூட்டமான வானத்தைப் போல இருண்டிருக்கும் முகத்தை நீங்கள் காணத் தவறினால் மின்னலும் இடியும் கூடத் தொடரலாம் ! முழு சந்திரமுகியைக் காண விரும்பினால் இதேதும் புரியாத அப்பாவி போல உங்களால் தாங்கமுடிந்த எல்லை வரை போய் பார்க்கலாம் ! ஒரு எச்சரிக்கை . மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக நீங்கள் சரணாகதி தத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாலும் வாதை தொடரும் . மறதி எனும் வியாதி அவர்களை இவ்விடயத்தில் ஒரு போதும் அண்டாது ! தொடரும் மணவாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களை அடித்து சொல்லித்தந்து தேற்றி விடும் . நிற்க !  நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்கும் போது பெண்களின் மனநிலையைப