இடுகைகள்

ஆகஸ்ட், 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவுலகம்-7

இதுவரை அவன் கணினி வரைகலை எப்படி இருக்கும்/இயங்கும் என்று யூகித்திருந்தானோ அப்படியே இருந்தது. ஆச்சயம் தாளவில்லை அவனுக்கு, தன்னம்பிக்கை நிறைய வளர்ந்த நாள் அது. அப்போது கணினிவரைகலைத்தொழில் ஒரு சிலரின் பிடியிலிருந்தது அவர்கள் யாருக்கும் கற்றுத்தருவதை, போட்டியை உருவாக்குவதாக நினைக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டான். பின்னர் பயிலகத்தில் விரிவுரையாளர்களுக்கு நடந்த ஆட்டோ கேட் (Auto CAD) பயிற்சிப்பட்டறையில் பார்வையாளனாக அனுமதி பெற்று கலந்துகொண்டான். நுணுக்கங்கள் விளங்கின, கலை கைவந்தது. பெயிண்ட் நிறுவனத்தில் பணியைத்தொடர்ந்துகொண்டிருந்தான், ஆனால் அதில் அவனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. கணினி வரைகலையை (Computer Graphics) பகுதி நேரத்தொழிலாக கைக்கொள்ள முனைந்தான். அப்போது மிகுந்த வாக்குசாதுரியம் உள்ள ஒருவனை எதேச்சையாக சந்தித்தான், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, சேர்ந்து தொழில் தொடங்க முடிவு செய்தனர். அவனுடைய தந்தையும் அவன் வேலையை விட அனுமதிதார். வெளிவேலைகளையும் நிர்வாகத்தையும் அவனுடைய பங்காளி செய்வதாகவும், கணினிவரைகலைப்பணிகளையும், வகுப்புக்களையும் அவன் செய்வதாகவும் முடிவா

கனவுலகம்-6

தன் சிந்தனைக்கும் உண்மைக்கும் இடையே இருந்த இடைவெளியை உணரத்துவங்கினான் அவன். புதிதாக சேர்ந்திருந்த வேதியல் தொழிற்சாலையில் வாழ்வியல் பாடம் படிக்கத்துவங்கினான், சுகாதாரமற்ற வேலையிடமும், சுயநலம்பிடித்த புறம்பேசும் மனிதர்கள் நிறைந்த அந்தச்சூழலும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேலையில் ஆர்வமும் அவனுக்கு இல்லை அதனால் நல்ல பேரும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆயினும் தோல்வியடைந்தவனாக தந்தையின் முன் நிற்க அவனுக்கு விருப்பமில்லாததால் எப்படியோ தாக்குப்பிடித்தான். நாளுக்குநாள் அவனுடைய பொறுமை நலிந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட பொறுமையை முற்றாக இழந்துவிட்ட ஒரு நாள் அவனுக்கு பெயிண்ட் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. சிறப்பாக அவன் கேள்விகளுக்கு பதில் சொன்னதால் வேலையும் கிடைத்தது. அங்கே மனிதர்களைப்பொருத்தவரை ஆரோக்கியமான சூழல் நிலவியது. மாதவனிடம் அவன் பேசிக்கொண்டிருந்தபோது அதைக்கேட்டுக்கொண்டிருந்தவர் வேறுயாருமல்ல கணித விரிவுரையாளராக பணியாற்றிய அவனுடைய தந்தைதான். அவர் கேட்டதோடு நில்லாமல் தன் சகாக்களிடம் வெறும் கணினியை மட்டும் வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள முடியுமா என்

கனவுலகம்-5

அந்த ஆச்சரியம் ஏற்பட அவனுக்கு நண்பனும் எதிரியுமாக(?!) ஏற்கனவே அறிமுகமாயிருந்த மாதவனும் ஒரு காரணம். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள், எதிரெதிராக விவாதித்தபடி. இவன் சொல்லும் எந்த கருத்துக்கும் எதிர் கருத்தோடு தயாராக இருப்பான் மாதவன். மணிக்கணக்காக நீண்டு செல்லும் இத்தகைய விவாதங்கள் இவன் தன் கருத்துக்களை வலுப்படுத்திக்கொள்ள உதவின. பாடதிட்டத்தில் இல்லாதபோதும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் கணினிகளை தருவித்திருந்த பயிலக முதல்வர் திரு.இராமன், அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தார். ஐந்து நபர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்த வகுப்பினரிடையே இரு குழுக்களுக்கு மட்டுமே கணினி பயில தகுதி அடிப்படையில் வாய்ப்பு. மாதவன் படிப்பாளியாக இருந்ததால் அவனோடு சேர்த்து இணைபிரியாத இவனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னியியல் போலின்றி கணினியில் கைமேல் பலன் உடனடியாக, அவன் மின்னியியலை விட்டுவிட்டு மின்னியியலின் வளர்ச்சியால் விளைந்த கணினியை பற்றிக்கொண்டான். மாதவன் வெகுதொலைவிலிருந்து பேருந்தில் வருவதால் வகுப்பை தவறவிடாமல் இருக்க சீக்கிரமே வந்துவிடுவான். முதல்வரும் சீக்கிரமே வந்துவிடு

கனவுலகம்-4

வால்வுகள் முற்றாக வழக்கொழிந்துவிடவில்லை. இன்றைய தொலைக்காட்சியில் பிம்பத்தை காண்பிப்பதும் picture tube ஒரு வால்வு தான். சாதிக்கும் வெறி மட்டும் போதுமா? அதற்குரிய பொறுமை வேண்டாமா. அவனிடம் இல்லாதது அதுதான், செய்யத்துவங்கிய செயலின் பலன் உடனடியாக கிட்டவேண்டும் என்று விரும்பினான். மின்னியியலில்(electronics) அது செல்லுபடியாகவில்லை. சிறு வானோலி ஒன்று அமைக்கும் முயற்சியில் அவனுக்கு தோல்விதான். அந்த தோல்வி அவனை மீண்டும் மீண்டும் முயற்சிக்க தூண்டி தன்னுடைய துறையாக அவனை மின்னியியலை தேர்ந்தெடுக்க வைத்தது இந்த வாய்ப்பை அவன் பத்தாவது படிக்கும்போது அவனுடைய தந்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார். "நீ மட்டும் இறுதித்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் (மொத்த மதிப்பெண் 500) எடுத்தால் உன்னை மின்னியியல் படிக்கவைக்கிறேன்", என்று உறுதியளித்தார். அதே நேரம் தலைமையாசிரியரும், "நீ 400க்கு மேலே மார்க் எடுப்பியா? உன்னாலே முடியாதுடா! சான்சே இல்லை", என்று அடிக்கடி உசுப்பிவிட்டார். அவனுடைய கவனம் முழுவதும் படிப்பின் பக்கம் திரும்பியது. நன்றாக தேர்வு எழுதி முடித்தபின் விடுமுறையில் ரேடியோ டிர

கனவுலகம்-3

"வால்வுகள்" எனும் அப்புத்தகம் மின்னியலிலிருந்து மின்னணுவியல்(electronics) கிளர்த்தெழுந்த வரலாறை விவரித்தது. மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டபின் தொடர்ந்த ஆராய்ச்சி வால்வுகளின் கண்டுப்பிடிப்புக்கு அடிகோலியது. ஒரு சிறு வேறுபாடிருந்தால் அதை பெரிதுபடுத்துவதென்பது மனித குலத்துக்கு புதிதன்று. அதனால் தீமை மட்டுமே விளையும் என கண்டிருந்தார்கள் வால்வுகளை பயன்படுத்தி சிறு மின் அதிர்வுகளை பெரிதுபடுத்த முடிந்தது. அதைக்கொண்டு சிறிய ஓசைகளை பெரிதுபடுத்தும் ஒலிப்பெருக்கிகள், வானோலி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. பரிட்சை நேரத்தில் பக்கத்து வீட்டில் அலறும் ஒலிப்பெருக்கிகளால் பாதிக்கப்பட்டோர் அவைகளால் விளைவது தீமையே என்று அப்போதைக்கு சொன்னாலும் நன்மைகளை உணராமல் இல்லை வால்வுகளின் நிகழ்ந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நேரில் பார்ப்பது போல வெகு அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. அவன் ஆவலோடு மொத்த புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்துவிட்டான். "இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நிகழ்ந்தவிதம் உள்பட விவரிக்கப்படும்போது எவ்வளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. நம் அறிவியல் பாடங்கள் ஏன் இத்தனை ஈர்ப்

கனவுலகம்-2

எந்தப்பள்ளியில் அவன் படிப்பு கெடும் என்று சொல்லப்பட்டதோ அந்த அரசுப்பள்ளியில்தான் அவனுடைய படிப்பு பலப்பட்டது. அவன் இதுவரை படித்த பள்ளியின் பெருமைகளும், அவனின் தோற்றமும், சிறந்த படிப்பாளி எனும் பிம்பத்தை சகமாணவர்களிடையே ஏற்படுத்தியது. முதல் இரு நிலைகளில் உள்ள மாணவர்கள் தங்கள் இடத்துக்கு ஏதும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அனாவசியமாக பயந்தனர். அங்கே அவனை கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆள் இல்லை. மாறாக அவன் நன்றாக படிப்பான் என நம்பினர், அந்த நம்பிக்கையை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். இறுக்கமற்ற இந்த புதிய சூழலும் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையும் அவனை மாற்றின. நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உடைக்க அவன் தயாரில்லை அந்த வலியை உணர்ந்திருந்ததால் தன்னை தகுதியானவனாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான். அறிவியல் ஆசிரியைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அறிவியல் பாடத்தை முதல் நாளே படித்துவிட்டு கேள்விகளுக்கு தயாராக வகுப்புக்கு செல்வான். ராக்கெட் பற்றிய பாடம் என்றால் ஊதுபத்தி அட்டையில் ஒரு ராக்கெட் மாதிரி செய்து வகுப்புக்கு எடுத்துச்செல்வான். இப்படியே அறிவியல் மெல்ல புரிபடவும் ஆர்வமூட்டவும் ஆரம்பித

கனவுலகம்-1

கோபம் கோபமாக வந்தது அந்த சிறுவனுக்கு "தூர்தர்ஷனுக்கு ஒரு சோப்பு பிடிச்சிருந்தா அதை மட்டும் வாங்கிக்க சொல்லலாமே! அதை விட்டுட்டு ஆயிரம் சோப்பைக்காட்டி இது இப்டி சிறந்தது, அது அப்டி சிறந்ததுன்னு மாத்தி மாத்தி சொல்லி ஏன் குழப்பறாங்க?", விளம்பரத்தின் விளக்கம் புரியாதவன் தந்தையிடம் கேட்டான். தந்தை மென்மையாக சிரித்தார். காலப்போக்கில் அவனே புரிந்துகொள்வான் என நினைத்தவர், பதிலேதும் கூற வில்லை. ஆனாலும் அவனுக்கு அவரே வழிகாட்டி, jungle book படத்துக்கு அழைத்துச்சொன்ற போது, கார்ட்டூன் படங்கள் தாள்களின் வினாடிக்கு 24 படங்களாக அசைவு மாற்றங்களை வரைந்து தயாரிக்கப்படுகிறது என்று விளக்கினார். "அம்மாடி! இந்தனை படம் வரைந்தால், வரைபவருக்கு கை வலிக்காதா", என்று அப்போது அவன் நினைத்துக்கொண்டான். ஆர்வமுடன் அவனை star wars படங்களுக்கு அழைத்துச்சென்றார். கதையேதும் புரியாதபோதும், கண்கள் மின்ன, லேசர் கத்திகளின் வீச்சையும் ரோபாட்களையும், வினோத ஜந்துக்களையும் வியப்போடு பார்த்தான். அவை அவன் கற்பனையிலும் தொடர்ந்தன. ஐந்தாம் வகுப்பு பள்ளி அறை, பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப்புதோழி பெருமை ப