பெண்ணியம்!
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilWqg3QvRY7j_AArxwr1lPpB5jCeNwsyY8rPAsYEn777P9vxXy07pY3oLRPWHj_OK51G_BETL8MHViyvZkGKn1YV3ez-hOBlxHBhLFBzAuQIUhnWCYQ3tOIHWZhrgTVmYESE48c4niZgeUSSrJeJzwrHxEDp-jtIopbup4MbzYIIqHslQQ_ZOkkQ/w203-h400/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.jpg)
“ நீங்க செய்தது பெண்கள் , தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட செய்றமாதிரி இருக்கு ”, என்றார் தோழி . நேற்று என் கோபம் பற்றிய பதிவுக்குத்தான் இப்படி ஒரு எதிர்வினை ! நான் யோசித்திராத கோணம் , உண்மை தான் ! என் மனைவிடம் கூட கண்டிருக்கிறேன் . முதன்முதலில் அவளின் தகிக்கும் கோபத்தை நான் உணர்ந்தது அவள் பிறந்தநாளை மறந்த போது ! மேகமூட்டமான வானத்தைப் போல இருண்டிருக்கும் முகத்தை நீங்கள் காணத் தவறினால் மின்னலும் இடியும் கூடத் தொடரலாம் ! முழு சந்திரமுகியைக் காண விரும்பினால் இதேதும் புரியாத அப்பாவி போல உங்களால் தாங்கமுடிந்த எல்லை வரை போய் பார்க்கலாம் ! ஒரு எச்சரிக்கை . மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக நீங்கள் சரணாகதி தத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாலும் வாதை தொடரும் . மறதி எனும் வியாதி அவர்களை இவ்விடயத்தில் ஒரு போதும் அண்டாது ! தொடரும் மணவாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களை அடித்து சொல்லித்தந்து தேற்றி விடும் . நிற்க ! நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்கும் போது பெண்களின் மனநிலையைப