கனவுலகம்-4

வால்வுகள் முற்றாக வழக்கொழிந்துவிடவில்லை. இன்றைய தொலைக்காட்சியில் பிம்பத்தை காண்பிப்பதும் picture tube ஒரு வால்வு தான்.

சாதிக்கும் வெறி மட்டும் போதுமா? அதற்குரிய பொறுமை வேண்டாமா. அவனிடம் இல்லாதது அதுதான், செய்யத்துவங்கிய செயலின் பலன் உடனடியாக கிட்டவேண்டும் என்று விரும்பினான்.
மின்னியியலில்(electronics) அது செல்லுபடியாகவில்லை. சிறு வானோலி ஒன்று அமைக்கும் முயற்சியில் அவனுக்கு தோல்விதான். அந்த தோல்வி அவனை மீண்டும் மீண்டும் முயற்சிக்க தூண்டி தன்னுடைய துறையாக அவனை மின்னியியலை தேர்ந்தெடுக்க வைத்தது

இந்த வாய்ப்பை அவன் பத்தாவது படிக்கும்போது அவனுடைய தந்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

"நீ மட்டும் இறுதித்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் (மொத்த மதிப்பெண் 500) எடுத்தால் உன்னை மின்னியியல் படிக்கவைக்கிறேன்", என்று உறுதியளித்தார்.

அதே நேரம் தலைமையாசிரியரும், "நீ 400க்கு மேலே மார்க் எடுப்பியா? உன்னாலே முடியாதுடா! சான்சே இல்லை", என்று அடிக்கடி உசுப்பிவிட்டார்.

அவனுடைய கவனம் முழுவதும் படிப்பின் பக்கம் திரும்பியது. நன்றாக தேர்வு எழுதி முடித்தபின் விடுமுறையில் ரேடியோ டிரான்சிஸ்டர், டேப்ரெக்கார்டர் சரி செய்யும் செயல்முறை வகுப்பில் சேர்ந்து பயின்றான்.

எதிர்பார்த்த மதிப்பெண்ணும் வந்தது.

அவனுடைய தந்தை அழைத்துப்பேசினார், "இப்ப எலெக்டிரானிக்ஸ் படிச்சா வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா இல்லை, ஆனா கெமிக்கல் படிச்சவங்க எல்லோரும் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகறதை பாத்திருக்கேன், வாழ்க்கையில செட்டில் ஆகிறது முக்கியம். உன்னோட ஆர்வத்தையெல்லாம் சைடு டிராக்லெ வைச்சுக்கோ".

அப்பாவின் வாதத்தில் உள்ள நியாயந்தை உணர்ந்தவன் அரை மனதாக சம்மதித்து வேதியல் தொழில் நுட்பம் பயிலத்தொடங்கினான்.

முதல் வருடம் ஆர்வமில்லாததாலும், ஆங்கிலமுறைக்கல்விக்கு மாற்றப்பட்டதாலும் சராசரிக்கும் கீழாகவே இருந்தான்.

ஆர்வமின்றி ஆரம்பித்த இரண்டாம் வருடத்தில் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு