இடுகைகள்

மே, 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கையிருந்து சென்னைக்கு-1

ஒரு பயண அனுபவம் ஒரு மாதம் சிங்கையில் இருக்கமாட்டேன் என்பதால் முடிக்கவேண்டிய அலுவலகப்பணிகள் நெருக்கின. மறுநாள் காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பவேண்டும் நள்ளிரவு 1 மணிக்குத்தான் வேலைகளை முடிக்க முடிந்தது. வழக்கமாக பெட்டியில் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்துக்கொள்ளும் நான் களைப்புதாளாமல் குப்பைக்கூடையில் அள்ளிகொட்டுவதுபோல கொட்டி மூடி உறங்கச்சென்றேன். ஒரு வழியாக எழுந்து குளித்து கிளம்பி வாடகைக்காரில் அமர்ந்தாயிற்று, சிலுசிலு என வீசும் காலைத்தென்றலை அனுபவித்தபடி யோசனையில் மூழ்கினேன். காலை நேர விமானப்பயணம் எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். பஞ்சுப்பொதிகளென தோன்றும் மேகங்களை நான் என் சிறுவயது கனவுகளில் கண்டதுண்டு, மெல்ல கதவிடுக்கு வழியே கசிந்து என் கட்டிலடியே அவை நுழையும். முதல் முறையே அவற்றை நனவில் கண்டபோது வியப்புத்தாளாமல் மனதுக்குள் கூவினேன். கனவில் கண்ட உருவம் போல அச்சு அசலாக அடர் புகையாக விமானத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் பரவிப்படர்ந்திருந்தது. அன்று முதல் இன்று வரை மேகங்களையும் சூரியன் அவற்றினூடே விளைவிக்கும் வண்ண மாற்றங்களையும் ரசிக்கத்தவறுவதில்லை. வழக்கமாக நேரே ச