இடுகைகள்

செப்டம்பர், 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ.பு.பயிற்சி-3: மரபணு

அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார். "மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்

அ.பு.பயிற்சி-2: நுண்ணுணர்வு

என் பெயர் அனந்த ராமன், ராமன் பெயரில் மட்டுமே. குஷாலாக என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி எனக்கு ரயில் பயணத்தில் வழித்துணை மட்டுமே. மதராஸிலிருந்து டெல்லிக்கு போக நாற்பத்தைந்து நிமிடம் ஆகிறதே, அவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியுமோ! இறுக்கமான அணைப்பு, அழுத்தமான முத்தம், சில தடவல்கள் அவ்வளவுதான். ஊர் வந்துவிட்டால் நான் வேறு அவள் வேறு. இப்போதெல்லாம் பரவாயில்லை, இந்த அதிவேக ரயில் சேவை வருவதற்கு முன்பெல்லாம் டெல்லி போக இரண்டரை மணி நேரம் ஆகும், அவசரம் என்றால் விமானமோ ஹெலிபேடோ பிடித்து போக வேண்டியதுதான். எனக்கு அந்தப் பயணமே பிடிப்பதில்லை. மின் காந்தங்களின் உதவியால் காற்றில் மிதப்பது போல பறக்கும் இந்த நவீன ரயிலை தான் தான் புழக்கத்துக்கு கொண்டு வந்தது என்று சொல்லியே ரயில்வே மந்திரி இரண்டாம் முறையாக பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த சாதனையில் எனக்கும் பங்குண்டு. ஆளில்லாமல் இயங்கும் இந்த ரயில்வண்டியினை இயக்கும் ஆணைத்தொடர்களில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக யோசிக்கவிடாமல் தொடைமீது கையை பட்டுப்பட்டென்று போடுகிறாள், எனக்கு ஜிவ்வென்று ஆகிவிடுகிறது. இ

அ.பு.பயிற்சி-1: அதிர்வுகள்

இந்த உலகம் அழகானது, அதே நேரத்தில் அசிங்கமானதும் கூட என்கிறார்கள். நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும், இன்னும் சற்று நேரத்தில் கட்டு அவிழ்க்கப் போகிறார்கள். இதோ டாக்டர் கூட வந்துவிட்டார். "மாலினி, சற்று நேரத்தில் உன் கண் கட்டை அவிழ்க்கப் போகிறேன். உன் விழிகளை மெல்லத்திறந்து ஒளியை உள்ளே கசியவிடு. சற்று உறுத்தலாக இருக்கும், பிறகு சரியாகிவிடும். அதிக உறுத்தல் இருந்தால் சொல்" பாட்டி பக்கத்தில் இருக்கிறார், எதிர்வீட்டுப் பெண்ணும் வந்திருப்பதை ஒலியால் உணர்கிறேன். கட்டு நீங்கியதும் என் விழித்திரையை மெல்ல விலக்கினேன். இத்தனைநாள் நான் பார்த்த இருட்டை புரட்டிப்போட்டாற்போல ஒளி, என் கண்ணே பொசுங்கிவிடும்போல, சூரீர் என்று ஒரு வலி. தாங்கமுடியாமல் போகவே விழியை மூடிக்கொண்டேன். "எல்லாருக்கும் முதல் முறையே வெற்றி கிடைத்துவிடுவதில்லை, இருபது வருடமாக இருட்டையே உணர்ந்திருந்த மூளை இந்த தகவல்களை வாங்கி உணர சற்று காலம் தேவைப்படுகிறது, சில மருந்துகள் தருகிறேன் மீண்டும் நாளை முயற்சிப்போம்" டாக்டர் அகன்று விட்டார், நடையொலி மெல்லத்தேய்ந்து அடங்கிவிட்டது. நான் நர்சின் உதவியுடன் படுக்கை

அறிவியற் புனைகதைப் பயிற்சி

வரப்போகும் போட்டியில் கலக்கப்போகும் அனைவருக்கும் என் வரவேற்பும் வாழ்த்துக்களும். அறிவியற் புனைகதைகளைப் பொருத்தவரை முழுக்கதையும் மனதுக்குள் உருவாகியபின் நிறைவைத்தரும் கதைகளை மட்டுமே எழுதுவது என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். அதன்படித்தான் எழுதியும் வந்தேன். ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டு போகவேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல்லும்போது என்னால் வியப்பில் ஆழ மட்டுமே முடிந்தது. முடிவை யோசிக்காமல் துவக்கப்படும் கதைகள் சுவாரஸ்யம் அளிக்குமா? நிறைவான உணர்வு தருமா? என்கிற சந்தேகம் தொடர்ந்தது. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம என்பார்கள். நான் அறிவியல் புனைகதை எழுத பயிற்சியாக சில ஆரம்பங்களை மட்டும் எழுதிப் பார்த்தேன். அவற்றை எழுதத் துவங்கும்போது முடிவைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எழுதினேன். பின்னர் படித்தபோது சுவாரஸ்யமாய் அவற்றை தொடர பல யோசனைகள் கிடைத்தன. மரத்தடியில் அவைகளை இட்டு மற்றவர்களை தொடரச்சொன்னேன், சுவாரஸ்யமான பல இழைகள் உருவாயின. அதை இங்கேயும் தொடர விருப்பம். நான் சில ஆரம்பங்ளை இடுகிறேன் அவற்றை நீங்கள் (ஆம்! நீங்களேதான்) தொடருங்கள். நான் உணர்ந்த சில உண்மைகளை நீங்களும்

அறிவியற் புனைகதைகள்

எல்லா கண்டுபிடிப்புக்களும் கற்பனையாலும், இயற்கையைப் பற்றிய புரிதலாலுமே நிகழ்கின்றன. அறிவியல் புனைகதைகள் கண்டுபிடிப்புக்கு வெகு அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன். இரண்டுமே கற்பனையில்தான் துவங்குகின்றன. இப்போது அறிவியற் புனைகதைகளுக்கு சற்று வரவேற்பான சூழ்நிலை நிலவுகிறது. திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கும் என்று நம்பலாம். எனக்கு புனைகதைகள் படிக்கவும், எழுதவும் மிகவும் பிடிக்கும். வலைப்பூவில் பெயரிலி சொன்னது போல என்னுடைய முதல் அறிவியற் புனைகதையின் இரண்டாம் பதிப்பை இன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன். என்னுடைய பாதுகாவல் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை இங்கே படிக்கலாம்.