அ.பு.பயிற்சி-3: மரபணு

அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார்.

"மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்லியும் அந்த மரமண்டைகளுக்கு புரியவில்லையே"

மூத்த விஞ்ஞானி ஜப்பார் டேவிட்சனை தன் கனிவான பார்வையில் சாந்தப்படுத்த முயன்றார்.

"டேவிட்சன், இவர்களின் செயல்பாடுகள் நாம் எதிர்பார்த்ததுதானே. அவர்களிடம் இந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்துவிடுங்கள், நாம் தனிப்பட்ட முறையில் தொடர்வோம். அடுத்த நடவடிக்கை என்ன?"

"குளோனிங் முறையில் உயிர்பிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தக் குழந்தை சோதனைக்கு தேவையான அளவு வளர்ந்துவிட்டது, நாளை முதல் முயற்சியாக வலது கை கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்"

இதேதும் அறியாத அந்தக்குழந்தை இன்னும் அவர்களை பார்த்து உற்சாக கூக்குரலிட்டது. அதன் முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ராஜி.

"ராஜி, அந்தக் குழந்தையுடன் உணர்வு மயமான உறவை வளர்த்துக் கொள்ளாதே, நமது ஆராய்ச்சிக்கு அது நல்லதல்ல", இறுகிய முகத்துடன் எச்சரித்தார் டேவிட்சன்.

* * * * * * * * * * * * * * * * * *

இனி இந்தக்கதையை எப்படி தொடரப்போகிறீர்கள்? குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது?

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு